மாதங்களில் நான் மார்கழி(பாடல் 1- 5)
பக்தி மார்க்கமாக பார்த்தால் எனக்கு தெரிந்த ஒரு விளக்கம். மனிதர்களான நம்முடைய ஒரு வருடம் என்னும் கால இடைவெளி தேவர்களுக்கு ஒரு நாள் எனவும் அதில் மார்கழி மாதம் அதிகாலை பொழுதை குறிக்கும் எனவும் பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த மார்கழி மாதத்தில தான் பாவை நோன்பிருந்து ஆண்டாள் அரங்கனை அடைந்தாள்.

கலை மார்க்கமாக பார்த்தால் மார்கழியில் விடியற்காலையில் எல்லார் வீட்டிலும் பூக்கும் அழகிய வண்ணப்பூக்களான கோலங்கள். இப்பொழுதெல்லாம் இரவிலேயே கோலங்களை போட்டு விடுகின்றனர். ஆனால் விடியற்காலையில் கோலம் போடுவது அதுவும் மார்கழி மாதத்தில் அந்த நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்று மாசற்றதாக இருக்கும் எனவே தான் விடியற்காலையில் கோலம் போடும் பழக்கம் வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டிலும் இரவில் தான் கோலம் போடுவது வழக்கம். சிறு வயதில் பெரிய தெருவில் இருக்கும் போது வீட்டு வாசலில் எல்லைக்கோடுகள் எல்லாம் வரைந்து பக்கத்து வீட்டு தோழி அதை தாண்டி கோலம் போடக்கூடாது என்றெல்லாம் சின்ன சின்ன சண்டைகள் போட்டிருக்கிறேன். மார்கழி மாதத்தில் பள்ளிக்கூடத்திலும் சரி கல்லூரி படிக்கும் காலத்திலும் சரி புத்தகங்களில், காகிதங்களில் எல்லாம் கோலம் போட்டுக்கொண்டே இருப்போம். அதிலும் வண்ணக்கோலங்கள் போடுவதென்றால் போதும் வண்ணங்களை கலந்து அது சரிவிகிதமாக இருக்கிறதா என்று ஆராய்ச்சியெல்லாம் பண்ணுவேன். கோலம் போடுவது ஒரு வித தியானம் தான். புள்ளியை நேராக வைத்து அழகிய கோடுகளை இழுத்து வளைந்து நெளிந்து இறுதியில் அழகிய ஓவியமாக வளரும் கோலங்கள் நம் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகின்றன.
மார்கழி மாதத்தில் களைகட்டுவது இசை கச்சேரிகளும் தான். சபாக்களுக்கு போய் அமர்ந்து கச்சேரிகளை கேட்பது போய் இப்பொழுதெல்லாம் நம் வீட்டின் வரவேற்பரையில் தொலைக்காட்சியின் மூலம் மிகவும் அமைதியாக அமர்ந்து ரசிக்க முடிகிறது.
இன்றிலிருந்து மார்கழி ஆரம்பம் என்பதால் வீட்டில் தினமும் திருப்பாவை படிப்போம். என் வலைப்பக்கத்திலும் தினம் ஒரு பாடல் என எழுத நினைத்திருக்கிறேன். அதற்கு முன் ஆண்டாளை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்' என்ற புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருப்பதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
அறிவிக்கின்றன. இவர் தமிழில் மிகவும் புலமை பெற்றவர். திருப்பாவையின் யாப்பு மிகவும் கடினமானது. இன்று திருப்பாவையின் யாப்பமைதியில் பாடல் ஒன்றை நம் சிறந்த கவிஞர்கள் எழுதினால் கூட அத்தனை எளிமையாக,அழகாக அமைப்பது கடினம். ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் 'சங்கத்தமிழ் மாலை' என்று போற்றப்படுகின்றன். திருப்பாவை என்பது பின் வைத்த பெயராக இருக்கலாம். பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தைத் தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான் அகநானூறு, நற்றினை,பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலும் குறிப்பிடப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகக் கொண்டு வட பெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும், அதில் உள்ள தெய்வத்தைக் கிருஷ்ணனாகவும் பாவித்து செய்த பாவை நோன்பை விளக்குகிறது திருப்பாவை."
திருப்பாவை பாடல் - 1
"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்."
திருப்பாவை பாடல் - 2
"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்:
இந்த வையத்தில்(உலகத்தில்) வாழ்பவர்களே,நாம் பாவை நோன்புக்கு செய்யும் செயல்களை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல துயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை பாடுவோம். விடியற்காலை(நாட்காலே) நீராடுவோம். நெய்,பால் போன்றவற்றை உண்ணாமல் இருப்போம். கண்களுக்கு மையிடாமல், மலர்கள் சூடாமல் இருப்போம். செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்போம். பிறரை கோள்(தீக்குறள்) சொல்லாமல் இருப்போம். தகுதியுள்ளவர்களுக்கு பொருளும்,பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு(ஆந்தனையும்) கொடுப்போம்.
திருப்பாவை பாடல் - 3
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்:
வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய நெய்தல் மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி இடையர்கள் குடம் குடமாக பால் கறக்கும் பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க வேண்டும்.
திருப்பாவை பாடல் - 4
"ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்"
பொருள்:
மழைக்கு அதிபதியான வருணனே, நீ சிறிதும் ஒளிக்காமல்(கைகரவேல்) நடுக்கடலில்(ஆழியுள்)புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு(முகந்து) ,மேலே ஆகாயத்தில் ஏறி எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான இறைவனின் உருவம் போல் கறுத்து, அழகிய தோள்களையுடைய பத்மநாபன் கையில் மின்னும் சக்கரம்(ஆழி) போல் மின்னலடித்து, சங்கு(வலம்புரி) போல் ஒலித்து, சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல், உலகினர் மகிழ நாங்களும் மார்கழி நீராடி மகிழ மழை பொழிவாயாக.
திருப்பாவை பாடல் - 5
"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்."
பொருள்:
மாயங்கள் புரிபவனை வட திசையில் உள்ள துவாரகையின் அரசனானவனை, தூய்மையான நீர் விளங்கும் யமுனை நதிக்கரையில் இருப்பவனை, இடையர் குலத்தினில் தோன்றிய மணி விளக்கினை, யசோதையின் வயிற்றில் தோன்றி அவள் வயிற்றை பிரகாசிக்க செய்த தாமோதரனை, நாம் தூய்மையோடு மலர் தூவி தொழுது, அவன் பெயரினை பாடி, மனதினால் அவனையே சிந்தித்தால் இது வரை செய்த பிழைகளும் இனி வரப் போகும் பாவங்களும் தீயிலிட்ட தூசியாய் அழிந்துவிடும்


47 மறுமொழிகள்:
Firefox-ல சரியா தெரியல. அலைன்மெண்ட் ஏதோ சரி பண்ணணும் வேதா. தமிழ்மண உதவிப் பக்கத்தில் பார்க்கலாம்.
வேதா, முதலில் வந்த எனக்கு வெண் பொங்கலா,சக்கரைப் பொங்கலா!!?இந்த மாதம் முழுவதும் தெருவெங்கும் கோல மயம் தான்,பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.இப்போது தான் உடுப்பி கிருஷ்ணரைத் தரிசித்து விட்டு வந்தேன்.ஆண்டாள் படமும் போடுங்களேன்,நன்றாக இருக்கும்.சதம் அடித்ததுக்குப் பாராட்டுக்கள்,இத்தனை நாட்கள் நான் சென்னையில் இல்லை(பொங்கல் கொடுக்கும் போது என் பங்கிலிருந்து போனால் போகிறது என்று ரவிக்கும் ஒரு தொன்னையில் கொடுத்திருங்கோ,ரவி எனக்கு நல்ல நண்பராம் சொல்லிருக்கார்)
Congrats veda for you 100th post:)
Margazi is my favorite month, i love to wake up early morning to feel the cool breeze, and the bird’s sound, snowdrops on the tree leaves, and we can experience it only in Margazi. Let me expect some kolam from u here!
The meaning for the Thiruppavai was nice.
மார்கழியில் இத்தனை விஷேஷங்களா.. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் வேதா.
என்ன தான் தமிழில் ஆர்வம் இருந்தாலும் இது போன்று திருப்பாவைகளை படிக்க வாய்ப்பு கிடைத்ததில்லை.. இதையெல்லம் இங்கே இடுவதற்கு நன்றிங்க வேதா
எங்கள் ஊரில் மார்கழி மாதம் கொஞ்சம் வித்தியாசமானது.. அது பற்றி இந்த அலுவலக அவசர வேலைகள் முடிந்த பிறகு ஒரு பதிவிடுகிறேன் வேதா..
அதுவரை உங்கள் பதிவில் மார்கழிப் பனியை திருப்பாவையில் கழிக்கிறேன் வேதா
"nazhabagam varuthey .. nazhabagam varuthey ..."
..hmmm .. konja varusam pinnadi poi .. board exam'ku thamizh paper'ku vizhndu vizhndu mug addicha nazhabagam .. dhaan varuthu ... .. veda .. hmmm tamizh teacheraa eppo marineenga ??? Hmmm ..
//மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் ..//
"S.Ve Sehkar'oda drama onnula .. intha line vara atha s.ve shekar thappa pronounce panna .. athuku "madee illa madhi da madhi" thiruthara comedy scene dhaan thonuthu .. ha ha ha !!!
.. hmm .. a different try veda .. hmm ... oru range'a dhaan post podareenga ponga ...
.. thirupaavai paadal padichaalum .. onum puriyathu ennaku .. so vanthu xplain pannunga .. the coming post'la ...
@umagopu...
..aha .. ithu allava recommendation .. pongaluku nanri .. (ayyo recommendation'ku nanri ...) aana naan pongal sapidarthu illa so .. tandoori dish'ku exchange offer unda .. !!
Veda, arumai arumai, miga arumai. Let me post something which I know of margazhi (atleast scientifically). It is during this month that sun's intensity is least and also ozone rich (not sure about the exact detail). That is why people are encouraged to put kolam and visit temples in the morning so that they get good exposure to this air. But Margazhi is also cold. Adhukkaga dhaan in temples venn pongal is served which has ghee and pepper - both helps against cold. So namba munnorgal evvalavu periya arivaaligal-nu idhu oru (one of the many many) eduthukaattu!
ஊர் நினைவு வந்திடுச்சு.
இங்கே 4 புள்ளி வைத்து போடலாம்..அதுவும் இரண்டு நிமிசத்தில் அழிந்து போகும்.அடுக்குமாடியில் எங்கே ??
ஊரில் என்றால் முதல் ஆளாக கோலம் முடித்து அப்படியே ஒர் ஊர்வலமாய் எல்லா கோலமும் பார்த்து...ஹ்ம்ம்..
தமிழ்மணத்துல சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள் வேதா..
@சேதுக்கரசி,
கொஞ்சம் அவகாசம் கொடுங்க, சரி பண்ணிடறேன்.
@உமா,
முதலில் வந்திருந்தால் கண்டிப்பாக வெண்பொங்கல் கிடைத்திருக்கும், சேதுக்கரசி தட்டிக்கிட்டு போயிட்டாங்க:)
உடுப்பி போயிருந்தீங்களா? அருமையான இடம், தங்க தேர் பார்த்தீங்களா?:)
வாழ்த்துக்கு நன்றி:)
@ஜீவ்,
வாழ்த்துக்கு நன்றி ஜீவ், கோலம் போட முயற்சி பண்றேன், என் வலைப்பக்கத்தில் படங்களை வலையேற்றம் செய்ய முடியலை, கணினியில் கொஞ்சம் ப்ரச்னை:)
@கார்த்தி,
உங்க ஊர் மார்கழி அனுபவங்களை எழுதுங்க, படிக்க ஆவலாக உள்ளேன்:)
@ரவி,
படிச்சதெல்லாம் ஞாபகத்துக்கு வருதா? ஹாஹா:)
நான் தமிழ் டீச்சரெல்லாம் இல்லை, இன்னும் கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.
திருப்பாவையின் ஒவ்வொரு பாடலுக்கு எளிமையான விளக்கமும் சேர்த்து தான் கொடுத்திருக்கேன் ரவி:)
பொங்கலுக்கே இங்க ஆப்பு வச்சுட்டாங்க,நீங்க என்னடான்னா தந்தூரி கேட்கறீங்க:)
@ரவி,
/that sun's intensity is least and also ozone rich (not sure about the exact detail). That is why people are encouraged to put kolam and visit temples in the morning so that they get good exposure to this air/
இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன், அப்ப நான் நினைச்சது சரி தான், எனக்கும் இப்படி தான் தோணியது ஆனா சரியான விளக்கம் நீங்க சொன்னப்புறம் புரிஞ்சது நன்றி ரவி.
@லட்சுமி,
/முதல் ஆளாக கோலம் முடித்து அப்படியே ஒர் ஊர்வலமாய் எல்லா கோலமும் பார்த்து...ஹ்ம்ம்../
ஹும்ம ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாட்டு தான் எனக்கு நினைவுக்கு வருது:) வருகைக்கு நன்றி:)
@கார்த்தி,
தமிழ்மணத்துல பதிவுகள் போடறதுல எனக்கு நிறைய சந்தேகமெல்லாம் இருக்கு நீங்க தான் மாட்டினீங்க அதுக்கு:)
ரொம்பவே நல்ல விஷயங்களை எழுதி இருக்கிறீர்கள். அப்படியே இதை முத்தமிழிலும் காப்பி, பேஸ்ட் பண்ணிடுங்களேன். கொஞ்சம் நியாயம் செய்த மாதிரி இருக்கும்.
தெரியாத பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி வேதா.
பாட்டு, அதுக்கு அர்த்தம் : கலக்கல்
4 பாட்டுக்கு ஒரு பதிவு-னு போடலாம்னு நினைக்கிறேன். இல்லேனா பதிவு ரொம்ப பெருசாயிடும் என்பது என் கருத்து.
பாடல்களுக்கு உங்களது எளிய விளக்கம் அருமை வேதா :).
மார்கழிமாசம் எங்க அம்மா திருப்பாவை பாட்டு போடுவாங்க.அதை கேட்டுட்டே காலங்காத்தால நல்லா இழுத்து போத்தி தூங்கறது ரொம்ப் பிடிக்கும். :D
margazhi maasathla, kaarthala kulirukku adakkamaa oru thick-aana porvai/kambuli ya izhuthu pothi thoongara sugam irukke.... ada ada ada!! :-P ezhundha odane sooda sakkarai/venn pongal kedachudhunnu vechukkonga... sorgathukke pona madhiri dhan. hee hee. :-D
நல்ல நேர்த்தியான பதிவு.
கோலங்கள் என்றால் இப்பவெல்லாம் அபி!தானே!னு எல்லா மாமிகளும் கேட்கறா. :)
திருப்பாவை, திருவெம்பாவை சேவைக்கு என் உள்ளம் கணிந்த பாரட்டுக்கள்.
வேதா பிராட்டியாரே! தொடரட்டும் நின் தமிழ் தொண்டு! :p
@umagopu, unga kooda doo! intha kuzhanthaiku oru kinnam sakkarai pongal vaangi vekka therinjatha? *ukkum*
அருமையான் போஸ்ட் வேதா. வண்ணக் கோலங்கள ரொம்ப மிஸ் பண்றேன். அப்புறம், சுடச் சுட வெண்பொங்கல், திருப்பாவை கூட..
திருப்பாவை பொருளோட போட்டதுக்கு ரொம்ப நன்றி வேதா.
semmaya solli irukeenga vedha.
evlo details. therindhu kolla nanraaga irundadhu. also congrats on your 100th post
semmaya solli irukeenga vedha.
evlo details. therindhu kolla nanraaga irundadhu. also congrats on your 100th post
//ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஆண்டாள் நிஜமானவர் என்பதை அவருடைய பெண்மை மிளிரும் பாசுரங்களே
அறிவிக்கின்றன.//
nijamaanga! 100% rite neenga solradhu!
nalla post! thxnga!
//ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஆண்டாள் நிஜமானவர் என்பதை அவருடைய பெண்மை மிளிரும் பாசுரங்களே
அறிவிக்கின்றன.//
nijamaanga! 100% rite neenga solradhu!
nalla post! thxnga!
Aaha.. Chinna vayasula Kaalangaarthaala pona maargazhi maasa bajanalaan nyaagabam vandhuduchu.. :) Missing all those now :(
@கீதா,
ரொம்ப நன்றிங்க, கணினி பிரச்னையால் இங்க போடறதே பெரிய விஷயமா இருக்கு, முயற்சிக்கிறேன்.
@அருண்,
பாட்டுக்கான அர்த்தம் முழுக்க நானே எழுதவில்லை சில தெளிவுரைகளை படித்து அதையும் கொஞ்சம் எளிமைப்படுத்தி இங்கே எழுதுகிறேன்.
/4 பாட்டுக்கு ஒரு பதிவு-னு போடலாம்னு நினைக்கிறேன். /
நானும் அதை தான் செய்ய இருக்கிறேன். 5 பாடல்கள் வரை தான் இந்த பதிவில்:)
@கோப்ஸ்,
/காலங்காத்தால நல்லா இழுத்து போத்தி தூங்கறது ரொம்ப் பிடிக்கும். :D /
நான் சொல்ல மறந்ததை ஆனா முக்கியமான விஷயத்தை நீங்க சொல்டீங்க:)
@விஜி,
/ezhundha odane sooda sakkarai/venn pongal kedachudhunnu vechukkonga... sorgathukke pona madhiri dhan./
ஹாஹா உண்மை தான், சொர்க்கம் தான.. நிச்சயம் கிடைச்சுடும்:)
@அம்பி,
/கோலங்கள் என்றால் இப்பவெல்லாம் அபி!தானே!னு எல்லா மாமிகளும் கேட்கறா. :)/
இதெல்லாம் டூ மச்:)நீங்க மாமிகள் கூட எல்லாம் பேசமாட்டீங்களே;)எதுக்கும் அவா பொண்ணுகளை விசாரிச்சு பாருங்கோ:D
/ தொடரட்டும் நின் தமிழ் தொண்டு! :p/
தன்யனானேன், கலியுக நாரதரே:D
@ப்ரியா,
இங்கேயே இப்பொழுதெல்லாம் வண்ணக்கோலங்கள் பார்ப்பது அபூர்வம் தான் ப்ரியா,அதுவும் இந்த அவசர உலகத்துல நாம நழுவ விட்டது எவ்வளவோ.
@கிட்டு,
ரொம்ப நன்றி,ஏதோ என்னாலான ஒரு பொது சேவை அவ்வளவு தான்:)
@ட்ரீம்ஸ்,
ஆமா கண்டிப்பாக மிகவும் உணர்ச்சிபெருக்கோடும்,அளவு கடந்த பக்தியோடும் இருந்தாலும் தான் இப்படிப்பட்ட பாடல்கள் எழுத முடியும்:)
@ஜி3,
/Missing all those now :( /
நானும் தான்:(
Veda,
You are doing a great job to Tamil through Blog by putting the meaning of Tiruppavai. Great we are reading it interestingly. Please continue your great works. I tell you your work will receive a great response and it will help many to know about the works of Andal and Tamil literature. BTW Goodaravallikku chakara pongal recipe pottal nalla irukkum. It will help many more to make Sakkarai pongal.
Arumaiyana post Sagothariyee..
Paaratta varthaigal varavillai.....Keep going.
There is lot to say about Dhanur Maasam.It is said in sastras that any spiritual rituals done in this month gives fruits immediatly as this Kala is the Brahma Muhurtha(early morning) for Devas.If the devas themselves are meditating on Paramatma,Why not we ? So let us increase our worship during this month.
Thanks for your time.
- Hayagriva Dasan
சரி நமக்கு இந்த போஸ்ட் அவுட் ஆப் சிலபஸ்... :-)
தமிழ்மணத்துல சேர்ந்த்தாச்சா வாழ்த்துக்கள்... :-)
தங்கச்சி கோ.ப.செ வேலைய சூப்பரா பாக்கர...தலைவர் பதிவு பத்தி மார்க்யூ ஓடிட்டு இருக்கு :-)
ரொம்ப நன்றிங்க கொ.ப.செ.. உங்க பதிவுல நம்மளை பத்தி ரயில் வண்டி விளம்பரம் தந்ததற்கு..
என்ன கைமாறு செய்யப் போறேனோ..உங்க கட்சிப்பணிக்கு..
டபுள் சல்யூட் வேதா..
//4 பாட்டுக்கு ஒரு பதிவு-னு போடலாம்னு நினைக்கிறேன். இல்லேனா பதிவு ரொம்ப பெருசாயிடும் என்பது என் கருத்து.
//
அருணோட கருத்துக்களை நான் வழிமொழிகிறேன் கொ.ப.செ
உங்களோட தொண்டுள்ளத்தையும் கட்சியின் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்று காரணமாகவும் அடுத்த அமைச்சரவை மாற்றம் அறிவிப்பில் தங்களுக்கு மிகப் பெரிய சந்தோசம் காத்திருக்கிறது வேதா..
நீங்க கொடுத்த விளம்பரத்தை பாத்த சந்தோசத்துல பேசாம முதல்வர் பதவியை கூட தந்திடலாமோன்னு ஒரு நிமிஷம் யோசிச்சிட்டேன் வேதா.. ரொம்ப நன்றிங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@பாலாஜி,
ரொம்ப நன்றி, ஆனா இதை விட சில வலைப்பக்கங்களில் இன்னும் அழகாக தொகுத்திருக்கிறார்கள்.இது ஏதோ என்னால் முடிந்தது:)
கூடாரவல்லிக்கு முழங்கை நெய் வழிய சர்க்கரை பொங்கல் என்னால் சாப்பிட தான் முடியும்,எனக்கு செய்ய தெரியாது:)
@ஹயக்ரீவ தாசன்,
நன்றி சகோதரரே, தாங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை:)
@ச்யாம்,
எங்க போயிட்டீங்க? இன்னிக்கும் வரலேன்னா உங்க வலைப்பக்கம் வந்து காதை திருகி அழைச்சுட்டு வந்துருப்பேன், அவுட் ஆப் சிலபஸா இருந்தாலும் வருகை பதிவு கொடுக்க வேண்டாமா?:)ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ச் நாட்டாமை:)
கொ.ப.செ என்றால் சும்மாவா? நாட்டுக்காக எவ்ளோ உழைக்க வேண்டியது இருக்கு?:)ஹிஹி
@கார்த்தி,
/டபுள் சல்யூட் வேதா.. /
ஹிஹி நன்றி தலைவா:)என்ன இருந்தாலும் தலைவர் தொண்டருக்கு சல்யூட் அடிக்கக்கூடாது:)
/அருணோட கருத்துக்களை நான் வழிமொழிகிறேன் கொ.ப.செ/
நாளையிலிருந்து அடுத்த பதிவில்:)
/அடுத்த அமைச்சரவை மாற்றம் அறிவிப்பில் தங்களுக்கு மிகப் பெரிய சந்தோசம் காத்திருக்கிறது வேதா../
நானும் காத்திருக்கிறேன் தல:)
//ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ச் நாட்டாமை:)//
ஐயோ எனக்கு புரியுதோ புரியலியோ...படிக்கரனோ படிக்கலியோ கரெக்ட்டா அட்டெண்டன்ஸ் போடுவேன்னு இந்த அண்ணன பத்தி தெரியலியா உனக்கு...எனக்கு புது பதிவு காட்டவே இல்ல...சரி இருந்தாலும் ஐ லை ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ச்...எல்லா பிகருகலயும் சைட் அடிக்கலாம்...ஐ ஆம் ஸ்டாண்டிங் ஆன் த பென்ச் நவ்.... :-)
prsent.. padichuttu comentren.
WOW!thiruppavai with meanings.
Thanks a lot.Wonderful post.
will come and read again --SKM
இந்த ஐந்தயும் படித்தேன். ரசித்தேன். இப்போது அடுத்த பதிவிற்கு செல்கிறேன்...
(யப்பா,தூய தமிழ்ல எழுதுறது எவளவு கஷ்டமா இருக்கு... எப்பிடித்தான் எழுதுறீங்களோ... :)
நல்ல பதிவு.வேதா..
வேதா அப்படி ஒலி பேழையா தர முடிந்தால் இன்னமும் நல்லா இருக்கும் என்று எண்ணுகிறேன்..
பறை://
விரும்பியதனை தருவான் என்ற பொருளா..
இப்போது தான் அறிகிறேன்..
இன்னும் நிறைய சொற்களுக்கு புது பொருள் ...
அப்புறம் இத படிக்கும் போது என்னுடைய old days நியாபகம் வந்துச்சு..
அக்கா கோலம் போட்டுட்டு ,அதன் மீது பூசனி பூ(அதுதானெ?)வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்கள்..
நான் தெரியாமல் வண்டியினை அதன் மீது விட்டு விட்டு
அம்மா..அன்னைக்கு வாங்கின ரவுண்டு இருக்கேகேகே....
i love her kolam..ana akkava antha kolatha vachu vambu ilukkarathu Golden days...
வேதா.
அப்புறம் ஒரு help:
கீதா சாரத்தில் வரும்
"எது நடந்ததொ அது நன்றாகவே நடந்தது" என்று வரும் சுலோகத்தின் எண் என்ன ?
எத்துனையாவது சுலோகம்?
//எல்லா பிகருகலயும் சைட் அடிக்கலாம்...ஐ ஆம் ஸ்டாண்டிங் ஆன் த பென்ச் நவ்.... //
ஷ்யாம், நீ தான்யா பக்கா நாட்டாமை
@ச்யாம்,
இந்த ப்ளாக் ரோல் எனக்கு கூட தான் சதி பண்ணிச்சு ஆனா நான் எல்லார் வீட்டுப்பக்கமும் போயிட்டு வந்தேன்,அதனால் இந்த சமாளிப்பெல்லாம் இங்க வேண்டாம்:)
சரி சைட் அடிச்சது போதும்,கீழ இறங்குங்க;)
அப்டியே போன பதிவுக்கு 50வது கமெண்ட் போட்டதுக்கு நன்றி:)
@ப்ரகாஷ்,
இன்னுமா கமெண்டரீங்க?:)
@skm,
தாராளமா படிக்கலாமே:)
@அருண்,
அடுத்த பதிவுக்கு போக இவ்வளவு நேரமா?:)
//@ப்ரகாஷ்,
இன்னுமா கமெண்டரீங்க//
நான் கமெண்டி ரொம்ப நேரம் ஆச்சு..நாட்டமை பெஞ்ச் மேல ஏறி நிக்கும் போது கமெண்டினேன்..
Ans Pls,,,
வேதா எப்படியோ நல்ல காரியம் பண்ணரதுன்னு தீர்மாணம் பண்ணீட்டிங்க. நடத்துங்க.பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கத்தையும் போடமுடியுமா?எல்லாரும் வந்தாச்சு நாந்தான் கடைசி எதாவது மிச்சம் மீதி இருந்த குடுங்க.
மணி பிரகாஷ், கீதையில் அப்படி ஒரு சுலோகமே இல்லை. நீங்க இந்த பதிலைப் படிப்பீங்களான்னு தெரியலை, இன்னிக்குத்தான் உங்க கேள்வியைப் பார்த்தேன். கீதையின் சாரம்னு வேணுமானால் இதைச் சொல்லலாம், மத்தபடி அந்தத் தொகுப்பிலே உள்ள எந்த விஷயங்களுக்கும் ஏற்ற மாதிரியான ஸ்லோகங்கள் கீதையிலே கிடையவே கிடையாது. எனக்கு நேரம் இருந்தால், கணினி சரியானதும் இதைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன். ஆனால் நீங்கள் என்னோட பதிவிற்கு வருவீர்களா தெரியவில்லை. முடிந்தால் வந்து பாருங்கள். எழுத ஆரம்பித்தால் உங்கள் பதிவில் வந்து தெரிவிக்கிறேன்.
//மணி பிரகாஷ், கீதையில் அப்படி ஒரு சுலோகமே இல்லை. நீங்க இந்த பதிலைப் படிப்பீங்களான்னு //
வணக்கம் கீதா மேடம். நான் உங்களின் வலைப் பக்கதிற்கு வந்துள்ளேன். ஆனால் தொடர்ச்சியாக வருவது எல்லாம் கிடையாது.. இனி வருகிறேன்..
என் கேள்விக்கு விடையளித்தமைக்கு நன்றி..
சுலோகமா,சாரமா என்று தெரியாததிற்கு வருந்துகிறேன்.. நீங்கள் சாரம் என்று சொல்லிய பிறகுதான் நானே " கீதையின் சாரம்" என்றுதானெ படித்தேன் என்று நாபகத்திற்கு வந்தது...
ஆனால் இதை பற்றி நீங்கள் எழுத போகிறீர்கள் என்பதை கண்டு மகிழ்ச்சி..
எளிய வகையில் ஒரு விளக்கமான முன்னுரையிடன்(எனக்கும் புரியுமாறு) தருவீர்கள் என்று நம்புகிறேன்.
@ப்ரகாஷ்,
கீதாசாரம் பத்தி கீதாவின் விளக்கம் தெளிவுபடுத்தியது என்று நம்புகிறேன்.:)
Post a Comment